ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும்: மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தல்

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக அரசின் மது கொள்கையையும் விமர்சித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பதவியேற்றுள்ளனர். ராகுல் காந்தி இன்று ஹத்ராஸ்க்கு சென்றிருக்கிறார். ஹத்ராஸ்க்கு செல்ல வழி தெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சிக்கு வர வழி தெரியவில்லை. இரட்டை நிலைப்பாடு எடுக்காமல் ராகுல் காந்தி உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களைப் பார்வையிட வேண்டும்."

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மிகப்பெரும் உத்வேகத்தோடு விக்ரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் இருக்கிறது," என்றார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, "ஸ்டாலின் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை ஒழித்து தமிழகத்தை காக்க வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும்," என்று கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் பற்றி கேட்கப்பட்டபோது, "விமர்சனங்களுக்கு எங்கள் தலைவர் சரியான பதில் கொடுத்துள்ளார். எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக திகழ்கிறது," என்றார்.

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் குறித்து, "புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மற்றும் சட்டங்கள் தமிழாக்கம் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மேலும், "தாராபுரம் வழியாக ஈரோட்டுக்கு ரயில் பாதை கொண்டு வருவதற்கான திட்டத்தை அடுத்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மேட்டுப்பாளைய ரயில் நிலையத்தை 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மேம்படுத்தி வருகிறோம். தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், அந்தப் பகுதி மக்களுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்," என்று முருகன் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...