புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் குட்டிகரணம் போட்டு பொதுமக்கள் போராட்டம்

அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.



அப்போராட்டத்தின் போது, தங்கள் ஊருக்குள் மதுபானக் கடை அமைந்தால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.



அதே போல, இந்துமக்கள் கட்சியின் சார்பாக பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குட்டிகாரணம் போட்டு அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கரவழி, மாதப்பூர், கணியூர் சாலை மற்றும் ஊஞ்சப்பாளையம் சாலையில் புதிதாக மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கைகளில் மதுபான கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி, மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கோஷங்களை எழுப்பினர்.

இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் இருப்பதாலும், பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் குடிநீர் தொட்டி மற்றும் கோவில் அருகில் புதிதாக மதுபான கடை அமையவிருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...