கோவை அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கிய காட்சியில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவையில் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அரங்கம் அமைத்துள்ள வியாபாரிகள் சார்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு அண்மையில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த மே 29 அன்று தொடங்கிய இப்பொருட்காட்சி ஜூலை 12 அன்று நிறைவடைய உள்ளதாகவும், இதனை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக கோடை விடுமுறை காலத்தில் நடைபெறும் இந்த பொருட்காட்சி, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது. தற்போது கோடை விடுமுறை முடிந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களின் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு 2.50 லட்சம் பேர் வருகை புரிந்ததாகவும், அதற்கேற்ப வருவாய் இருந்ததாகவும், ஆனால் தற்போது வருவாய் அளவும் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பொருட்காட்சியில் அரசின் நலத்திட்டங்களை மக்கள் கண்டுகளித்து வருவதோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியை நீட்டிப்பதன் மூலம் மேலும் அதிக மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...