கோவை அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கிய காட்சியில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவையில் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அரங்கம் அமைத்துள்ள வியாபாரிகள் சார்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு அண்மையில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த மே 29 அன்று தொடங்கிய இப்பொருட்காட்சி ஜூலை 12 அன்று நிறைவடைய உள்ளதாகவும், இதனை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக கோடை விடுமுறை காலத்தில் நடைபெறும் இந்த பொருட்காட்சி, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது. தற்போது கோடை விடுமுறை முடிந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களின் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு 2.50 லட்சம் பேர் வருகை புரிந்ததாகவும், அதற்கேற்ப வருவாய் இருந்ததாகவும், ஆனால் தற்போது வருவாய் அளவும் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பொருட்காட்சியில் அரசின் நலத்திட்டங்களை மக்கள் கண்டுகளித்து வருவதோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியை நீட்டிப்பதன் மூலம் மேலும் அதிக மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...