பொள்ளாச்சி கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பாதுகாப்பு குறித்து புகார்

பொள்ளாச்சி அருகே கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவியருவி, பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவியில் வறட்சி ஏற்பட்டு, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தனர்.

தற்போது, கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



எனினும், தண்ணீர் கொட்டும் இடத்தில் தடுப்புக் கம்பிகள் உடைந்து காணப்படுவதால் உரிய பாதுகாப்பு இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், அருவியின் அருகே கடைகள் அமைக்க வேண்டும், பெண்கள் குளிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...