பொள்ளாச்சி கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி; பாதுகாப்பு குறித்து புகார்

பொள்ளாச்சி அருகே கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு வசதிகள் இல்லாதது குறித்து சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் குரங்கு அருவி என்றழைக்கப்படும் கவியருவி, பல மாவட்டங்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவியில் வறட்சி ஏற்பட்டு, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்திருந்தனர்.

தற்போது, கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால், கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



எனினும், தண்ணீர் கொட்டும் இடத்தில் தடுப்புக் கம்பிகள் உடைந்து காணப்படுவதால் உரிய பாதுகாப்பு இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், அருவியின் அருகே கடைகள் அமைக்க வேண்டும், பெண்கள் குளிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...