கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம்

கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது. லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் அமைக்கப்படும் இந்த உணவகம், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்.


Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் விரைவில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்கனவே இது போன்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியை உணவகமாக மாற்றி, பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை ரயில் நிலையத்தின் முகப்பில், லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இந்த ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நோக்கத்திற்காக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சேவை செய்த ஒரு ரயில் பெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் பெட்டியை உணவகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில் பெட்டி உணவகத்திற்கான டெண்டர் பணி அடுத்த மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய முயற்சி, ரயில் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் ஒரு புதிய உணவு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...