கோவை சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

கோவையில் சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். நிறுவனம் அதிக வட்டி வாக்குறுதி அளித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.


கோவை: கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் பொருளாதார குற்றப் பிரிவில் புகார் மனு அளித்துள்ளார். அதில், கோவை உடையாம்பாளையத்தில் உள்ள ஃபிளவர் வேலன்சியா அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்த சர்வா ஹைடெக் சொல்யூஸன் லிமிடெட் நிறுவனம் மக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் என்றும் கூறி பலரிடம் முதலீடுகளை பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், நிதி நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் ரிதுவரணன், ஸ்ரீஹரி, பாலன் நாராயணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

இவ்வழக்கின் இறுதி அறிக்கையை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், மேற்படி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் காலம் தாழ்த்தாமல் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் அமைந்துள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களிடம் உள்ள தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...