கோவை பெரிய கடை வீதியில் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

கோவை பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 10 அன்று நடந்தது.


கோவை: கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முருகேசன், ஜூலை 10 அன்று பெரிய கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை அவர் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர். இது தொடர்பாக கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு தகராறில் ஈடுபட்டிருந்த தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சர்தார் (வயது 33) மற்றும் தில்லை நகரை சேர்ந்த அந்தோணி ஜெகன் மனைவி மேரி (வயது 40) ஆகியோரை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...