கூடலூர் நகராட்சியில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பூங்கா நீரூற்று: மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறப்பு

கோவை கூடலூர் நகராட்சியின் 12வது வார்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று கவனம் ஈர்க்கிறது.


Coimbatore: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 12வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது. கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ள இந்த பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குறிப்பாக, பூங்காவின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீரூற்று தற்போதே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



இரவு நேரங்களில் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் இந்த நீரூற்று, பூங்காவின் அழகை மேலும் அதிகரித்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரத்தை செலவிட ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, அப்பகுதி மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூங்காவின் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்ததும், விரைவில் இப்பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...