பொள்ளாச்சியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாட்டம்: குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு முறைகள், இளம் வயது திருமணத்தின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட குடும்ப நல துறையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தாய்மார்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன், மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர் ராஜாத்தி, மகப்பேறு உதவியாளர் திருமதி குணவதி, கவுன்சிலர் திருமதி மகேஸ்வரி முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



"ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம் - இதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்ற இந்த வருடத்தின் கருப்பொருள் விளக்கி கூறப்பட்டது. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தும் தாய்மார்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதும், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகளும் விளக்கப்பட்டன. முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகே இரண்டாவது குழந்தை பெற வேண்டும் என்றும், இடைப்பட்ட காலத்தில் தற்காலிக கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.



மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மகப்பேறு மருத்துவர்கள் மூலம் தினமும் செய்யப்படுவதாகவும், 22 வயதுக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்த பின் அறுவை சிகிச்சை மூலம் குடும்பக் கட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற கொள்கையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு, இரண்டு குழந்தைகளுடன் தாய் மற்றும் தந்தை அந்தக் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...