தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெறுகிறது. 2024-25 கல்வியாண்டுக்கு 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஜூலை 12) முதல் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு ஜூலை 14 மாலை 5 மணி வரை தொடரும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு 2024-25 ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கலந்தாய்வின்போது விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பின்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து கட்டணம் பெறப்படும். சேர்க்கை பெற்ற மாணவர்கள் மட்டும் சேர்க்கையை உறுதி செய்யும்போது இணையதளம் மூலம் ரூ.5,000 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்ளே நுழைந்து தங்களின் கல்லூரி, பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பமே இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும்.

கலந்தாய்விற்கான வழிமுறைகளை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 94886-35077, 94864-25076 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...