குறிச்சி பகுதியில் தொடரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகோரி மாநகராட்சி அணையரிடம் மனு

கோவை மாவட்டம், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 முதல் 100 வரையிலான வார்டுகளை உள்ளடக்கிய குறிச்சி பகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாணக் கோரி திமுக குறிச்சி பகுதி செயலாளர் நா.பிரபாகரன் தலைமையிலான திமுக-வினர் மாநகராட்சி அணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குறிச்சி நகராட்சியானது கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், ஆழியார் மற்றும் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டங்கள் இருந்தும் தற்போது குறிச்சி பகுதியில் 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை 25 நாட்களுக்கும் மேலாக சேமித்து உபயோகப்படுத்துவதால் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சியின் மற்ற வார்டுகளில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சியின் மற்றப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதைப் போலவே குறிச்சி பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய வேண்டும். 

மேலும், 3 நாட்களுக்கு ஒருமுறை வழக்கப்பட்டு வந்த கிணற்றுநீரும் தற்போது காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அத்யாவசியத் தேவைக்கும் கூட நீரின்றி சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே, லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரையும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியல் ஆதாயம் கருதி தங்களுக்கு வேண்டிய பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்கின்றனர்.

அதேப்போல குறிச்சி பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசமடைந்து உள்ளது. போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் துப்புரவு பணி மற்றும் வடிகால் சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் மந்தமாகவும், சரியான முறையிலும் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாகவும், தொற்றுநோய்கள் பரவுகின்றன. எனவே, சுகாதார பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேணடும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோவை பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகப்படியாக ஏற்பட்டு வருகிறது. உடனடியாக மேம்பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும், குறிச்சி பகுதியிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாமல் பயனற்று உள்ளது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிச்சி பகுதி திமுக செயலாளர் பிரபாகரன், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...