கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை வடவள்ளி அருகே உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் நூலக ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் இயங்கும் தனியார் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் நூலக பொறுப்பு ஆசிரியராக பணிபுரியும் பால்ராஜ் என்பவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பால்ராஜின் பாலியல் தொல்லை அதிகரித்ததால் மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு சிறுமிகளையும் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆர் எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியர் பால்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் பள்ளி முதல்வரிடம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் சென்றது. மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா தலைமையிலான குழுவினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.

பாலியல் புகார் தொடர்பாக போலீசாருக்கு முறையாக தகவல் அளிக்காத பள்ளி முதல்வர் மகேஸ்வரி, நிர்வாகி தண்டபாணி ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜூலை 12 அன்று போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...