பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வனத்துறை அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அருவியில் குளிப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் ஆழியார் கவியருவிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.



இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 7:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்து குவிந்தனர். வனத்துறை அதிகாரிகளும் வழக்கம் போல சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதித்தனர்.



எனினும், சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, காலை 9 மணி அளவில் திடீரென கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியிலிருந்து அதிக அளவில் நீர் கொட்டத் தொடங்கியதை அடுத்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை அவசரமாக வெளியேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆழியார் கவியருவியை தற்காலிகமாக மூடியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...