புலியகுளத்தில் குடியிருப்புகள் மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று வீடுகள் எரிந்து சேதம்


கோவை புலியகுளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியில் காவல் நிலையம் அருகே பஜார் வீதி என்ற இடத்தில் உள்ள ஓட்டு வீடுகளில் இன்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், லட்சுமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தானது, அடுத்தடுத்துள்ள வீடுகளுக்கும் பரவியது. 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின், அரை மணி நேரத்தில் தீயணைப்புத் துறையினர் தீயினை முழுவதுமாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் லட்சுமி, அந்தோனி அம்மாள், சகாயம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள தீயணைப்புதுறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து விட்டதாகவும், அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...