வால்பாறையில் மண் சரிவு: நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கி தவிப்பு

வால்பாறையில் கனமழை காரணமாக 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் மண் சரிந்து மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 23வது மற்றும் 24வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் சாலையின் மேற்பகுதியில் இருந்து மண் சரிந்து மரம் விழுந்தது. இதனால் சாலையில் மண் குவியல்களாக விழுந்து இருந்தது. காலை 4:30 மணி அளவில் வால்பாறைக்கு வந்த பேருந்து ஓட்டுநர் இதனைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.



இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வரும் வாகனங்களும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் நீண்ட தூரம் நின்றன. சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு சிக்கித் தவித்தன. காலை 7 மணி அளவில் தீயணைப்பு துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து வழக்கம் போல் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்பதால், வால்பாறை பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...