கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ அல்லது செல்பி எடுக்கவோ செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், உயர் மின்சார பகுதிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மின்சாதனங்களைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளைக் கட்டக்கூடாது.

வெள்ள அபாயம் அல்லது பிற இன்னல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தாழ்வான பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்புவோர் இதே எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...