காங்கேயம் அருகே கார் விபத்து: அமைச்சர் உறவினர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் கார் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து. அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் ஜெகன் பிரகதீஷ் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம் அருகே முத்தூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜெகன் பிரகதீஷ் (23), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார். நள்ளிரவில் முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஓட்டிச் சென்ற ஜெகன் பிரகதீஷ், பாப்பினி அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.



விபத்தில் படுகாயமடைந்த ஜெகன் பிரகதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த ஜெகன் பிரகதீஷ், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் அண்ணன் மகன் என்பதும், அவரது குடும்பத்தின் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...