தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆர்வலர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறது.

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000/- ரொக்கப்பரிசும் தகுதியுரையும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. தன்விவரக் குறிப்புகள்

2. வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்று அல்லது ஆதார் அட்டை நகல்

3. வெளியிடப்பட்ட நூல்கள், கட்டுரைகள் பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் ஒரு படி இணைக்க வேண்டும்)

4. தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பு அல்லது உறுப்பினர் விவரம்

5. விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தகு பணிகள்

6. தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக் கடிதம்

7. மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம்

8. இரண்டு கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்

9. ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகள்

விண்ணப்பங்களை கோயம்புத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 0422-2300718 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...