பொள்ளாச்சியில் சிற்பி இலக்கிய விருது விழா: பல எழுத்தாளர்களுக்கு கௌரவம்

பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா நடைபெற்றது. பல்வேறு எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிற்பி பாலசுப்ரமணியத்தின் இரு நூல்கள் வெளியிடப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கும் சிற்பி இலக்கிய விருது விழா 16-07-2024 அன்று நடைபெற்றது. என்.ஜி.எம் கல்லூரியின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில், பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. முனைவர் க.பஞ்சாங்கம் இந்த நூல்களை வெளியிட்டு அறிமுக உரையாற்றினார். முனைவர் கி.பார்த்திபராஜா நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். "நறிவிலி" எனும் கவிதைத் தொகுப்பும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதைகளின் மொழிபெயர்ப்பான "உழவனின் பாடல்" ஆகிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.



2023ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுகள் கவிஞர் மற்றும் திரைப்பட இயக்குநர் பிருந்தாசாரதி மற்றும் கவிஞர் கோ.வசந்தகுமாரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஓவியக் கவிஞர் அமுதபாரதி மற்றும் கவிஞர் நா.வே.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டுக்கான சிற்பி இலக்கியப் பரிசு கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. மேலும், பதிப்பியல் வித்தகர் எனும் விருது மணிவாசகர் பதிப்பகத்தைச் சார்ந்த இராம.குருமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.



விருதாளர்கள் குறித்த அறிமுக உரையை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் க.அம்சப்ரியாவும் கவிஞர் இரா.பூபாலனும் வழங்கினர். கவிஞர் நந்தலாலா விருதுபெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். கிருங்கை சேதுபதி நன்றியுரை வழங்கினார். பேராசிரியர் வடிவேல் மற்றும் பேராசிரியர் சேதுபதி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.



நாஞ்சில்நாடன், சுப்ரபாரதிமணியன், விஜயா மு.வேலாயுதம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இலக்கிய அமைப்பினர் என திரளானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். சிற்பி அறக்கட்டளை, என்.ஜி.எம் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...