கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் 87 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை


வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல சிட் பண்ட் நிறுவனமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் 87 கிளைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று அதற்கு வட்டி வழங்கி செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் செயல்பட்டுவருகிறது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்நிறுவனம் வருமானத்திற்கு உரிய முறையில் கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக அந்நிறுவனத்தின் 87 கிளைகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் நூறு அடி சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கணபதியில் உள்ள அந்நிறுவன கிளை உள்ளிட்ட 7 இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பிரபல சிட்பண்ட் நிறுவனத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனை அதன் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...