கோவையில் துவரம் பருப்பு விலை கிடுகிடு உயர்வு: மளிகைப் பொருட்கள் விலையும் அதிகரிப்பு

கோவையில் துவரம் பருப்பு விலை ரூ.195-ஆக உயர்ந்துள்ளது. குருமிளகு, சுண்டல், முந்திரி, ஏலக்காய், பட்டாணி போன்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மழை குறைவால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Coimbatore: கோவையில் துவரம் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மளிகைப் பொருட்களின் விலை அதிகரிக்கும். பின்னர் ஜனவரி மாதத்தில் விலை குறைந்து, ஏப்ரல்-மே மாதங்களில் நிலையாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் துவரம் பருப்பின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.140 ஆக இருந்தது. கடந்த மாதம் இது ரூ.160 ஆக உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.195-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மற்ற மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது:

- குருமிளகு: ரூ.600-லிருந்து ரூ.780-க்கு உயர்வு

- சுண்டல்: ரூ.70-லிருந்து ரூ.110-க்கு உயர்வு

- முந்திரி: ரூ.550-லிருந்து ரூ.850-க்கு உயர்வு

- ஏலக்காய்: ரூ.1,800-லிருந்து ரூ.3,000-க்கு உயர்வு

- பட்டாணி: ரூ.80-லிருந்து ரூ.130-க்கு உயர்வு

கோவையின் தானிய மார்க்கெட் சந்தைகளில் பெரும்பாலான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஒரு வியாபாரி கூறுகையில், "மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மழைப் பொழிவு குறைவால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ளது," என்றார்.

மேலும் அவர், "முந்திரி, ஏலக்காய், பூண்டு, பட்டாணி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் நவம்பர்-டிசம்பர் மாதம் வரை தானியங்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை," எனத் தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...