வால்பாறையில் கனமழை: சோலையார் அணை நீர்மட்டம் உயர்வு

வால்பாறையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளான கருமலை, அக்காமலை, பச்சைமலை, வெள்ளமலை, சின்னகல்லார், நீறார் அணை, சின்கோனா, பெரியகல்லார், சோலையார் அணை, சேக்கல் முடி, புதுக்காடு மழுக்கபாறை ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையின் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள நடுமலையாறு மற்றும் கூலாங்கள் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.



வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறுகளில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்று பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வால்பாறை நகராட்சி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பதிவான மழை அளவு மற்றும் சோலையாறு அணையின் நிலவரம் பின்வருமாறு:

- வால்பாறை: 69 மி.மீ

- நீரார் அணை: 74 மி.மீ

- சின்னகல்லார்: 105 மி.மீ (அதிகபட்சமாக 10 செ.மீ)

- சோலையாறு அணை: 62 மி.மீ

சோலையாறு அணைக்கு தற்போதைய நீர் வரத்து 7,753 கன அடியாக உள்ளது. அணையில் தற்போது 4 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் மொத்த உயரம் 165 அடி என்ற நிலையில், தற்போது 140 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. ஒரே நாளில் 12 அடி உயரம் தண்ணீர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்னும் சில தினங்களில் அணை முழு கொள்ளளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...