கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் இளைஞர்கள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் ஆற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நொய்யலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி மற்றும் கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை மற்றும் அதன் அணைகட்டு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து விநாடிக்கு 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது.



இந்நிலையில் சில இளைஞர்கள், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆபத்தை உணராமல், ஆற்றில் இறங்கி 'செல்பி' எடுப்பது, குளிப்பது, மீன்பிடிப்பதுமாக இருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபோன்ற அபாயகரமான செயல்களைத் தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...