பிஎஸ்ஜி கல்வி நிறுவன பிஜிடிஎம் துறை சார்பில் திருநங்கைகளுக்கு கைவினைப் பொருட்கள் பயிற்சிப் பட்டறை

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்வி மேலாண்மை நிறுவனத்தின் பிஜிடிஎம் துறை சார்பில் திருநங்கைகளுக்கான கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநங்கைகள் 20 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு பொது மருத்துவமனை மேற்பார்வையாளர் மற்றும் ஐகான் ஆஃப் கோயமுத்தூர், ஸ்வச் பாரத் விருது பெற்ற திருநங்கை தஷ்லிமா நஷ்ரிம் பங்கேற்றார். மேலும், பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் நந்தகோபால், பேராசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதைத்தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் தஷ்லிமா நஷ்ரிம் பேசுகையில், திருநங்கைகள் தங்களது வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிஎஸ்ஜி குழுமம் தான் முதல்முறையாக "ஹிஜிரா" என்ற நிகழ்ச்சியை திருநங்கைகளுக்காக நடத்தியது. அந்த நிகழ்ச்சி திருநங்கைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதன் மூலமே 48 சதவிகித திருநங்கைகள் பணிக்குச் சென்று தங்களது வாழ்வை மேம்பாட்டுடன் நடத்தி வருகின்றனர். எங்களுக்கு இவ்வாறான நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியதில் மாணவர்களின் பங்கு மிகவும் வாழ்த்துக்குறியது" என்றார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் வளையல், காதணி உள்ளிட்ட கைவினை அழங்காரப் பொருட்கள் செய்தல் மற்றும் மெகந்தி வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...