அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை நிரம்பியதால், பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பொதுப்பணித்துறை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது அமராவதி அணைக்கு வினாடிக்கு 7,000 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது.



இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிரதான மதகுகள் வழியாக 2,000 கன அடியும், பிரதான கால்வாய் மூலம் 1,000 கன அடியும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூடுதலாக உபரி நீரை வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால் கரையோர கிராமங்களான கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், ருத்திரபாளையம், மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



பொதுப்பணித்துறை சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும்.

அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசர காலங்களில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...