கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.


Coimbatore: கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜூலை 19 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, காந்திபுரம் - இராமநாதபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்கள் 63, 64, 66 ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணபதி ராஜ்குமார் தனது நன்றியை தெரிவித்தார்.



இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



கணபதி ராஜ்குமார் எம்பி தனது உரையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார். மேலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...