கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - பிஆர்ஜி அருண்குமார் எம்எல்ஏ அறிவிப்பு

கோவையில் ஜூலை 23 அன்று திமுக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் நியாய விலை கடை பொருட்கள் குறைப்பை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பிஆர்ஜி அருண்குமார் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி, திமுக அரசின் மூன்றாவது முறையான மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஜூலை 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதிமுக இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி மற்றும் தகவல் தொழில்நுட்பபிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று பிஆர்ஜி அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழகம், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அருண்குமார் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...