போத்தனூர் அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் கார் கொள்ளை

கோவை மாவட்டம், போத்தனூர் கருப்பராயப் கோவில் வீதியை சேர்ந்தவர் ஷா ஆலம் (43). இவர் கடந்த 16ம் தேதி தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு நேற்று கோவை திரும்பியுள்ளார். 

அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷா ஆலம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை, 30,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 60 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாண்ட்ரோ காரும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் ஷா ஆலம் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவிடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...