அட்டகட்டியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது

வால்பாறை வட்டம், அட்டகட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஒவ்வொறு துறை தொடர்பாக பொதுமக்கள் அரிந்திடும் வகையில் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். 



முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், கோவை மாவட்ட தொழிலாளர் துணை ஆணையர், வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குநர், கோவை வேளாண்மை துறை மற்றும் தோட்ட கலைத்துறை இணை இயக்குநர், வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர்,



முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மாற்றுத்திரணாளிகள் நல அலுவலர், சமூக நல அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர், தனித்துணை ஆட்சியர், வால்பாறை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர், வால்பாறை காவல் ஆய்வாளர், வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு துறையினைச் சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்றனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வரவேற்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு சிறப்புரை ஆற்றினார். வருவாய்த்துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையுரை ஆற்றி அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.



முகாமில் பழங்குடியின மக்களுக்கு சான்றுகள், மின்னணு குடும்ப அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் வால்பறை வட்டாட்சியர் நன்றியுரை ஆற்றினார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...