கோவையில் பள்ளி வேன் ஏறி முதலாம் வகுப்பு மாணவன் காயம்: அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவை சிங்காநல்லூரில் உள்ள வெங்கடலட்சுமி தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவன் மீது வேன் ஏறி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த இச்சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடலட்சுமி தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு முதலாம் வகுப்பு மாணவன் மீது பள்ளி வேன் ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சிறுவன் மீது வேன் ஏறி இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த குழந்தைக்கு தற்போது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருகூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் இரண்டு மகன்கள் இந்த தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களில் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவனே இந்த விபத்தில் சிக்கியுள்ளான்.

சம்பவம் நடந்த விதம் குறித்து விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, வேனில் இருந்து மாணவர்கள் இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் வாகனத்தை இயக்கிவிட்டார். இதனால், சிறுவன் ஓடும் வேனில் இருந்து இறங்கிய போது தவறுதலாக சக்கரத்தின் கீழ் விழுந்து விபத்துக்குள்ளானான்.

விபத்து நடந்தவுடன், அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...