பொள்ளாச்சியில் மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கக் கோரி MLA மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என பொள்ளாச்சி MLA ஜெயராமன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி வடுகபாளையம் செல்லகுமாரர் விஸ்தரிப்பு வீதியில் உள்ள இரயில்வே கேட்டை (LC.NO:123) மீண்டும் திறக்கக் கோரி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த இரயில்வே கேட் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த பகுதியில் இருந்து பொள்ளாச்சி நகரத்திற்கும், கோவை ரோட்டிற்கும் செல்வதற்கு இந்த ஒரு வழித்தடம் மட்டுமே மிக அருகாமையில் இருந்தது. பாலக்காடு ரோட்டில் இருந்த மற்றொரு வழித்தடம் மேம்பாலம் கட்டியதற்குப் பிறகு அடைக்கப்பட்டுவிட்டது.



தற்போது இந்த இரயில்வே கேட் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி தீவு போல் ஆகிவிட்டதாக MLA ஜெயராமன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில்வே கேட்டிற்கு அருகாமையில் வாழும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் 4 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவை இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வந்தன. மேலும் 1937ஆம் ஆண்டு முதல் இந்த கேட்டிற்கு அருகாமையில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பயன்பட்ட வழித்தடத்தை பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்திக் கொள்ள LC.NO:123 இரயில்வே கேட்டை திறந்து தருமாறு பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் MLA ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...