குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும்நடவடிக்கை- கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார்கள் பொருத்தி குடிநீர் எடுக்கப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்து, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்களான 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100க்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் போது வீட்டுக் குடிநீர் இணைப்புதாரர்கள் தங்களது குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்க வேண்டாம் என இணைப்புதாரர்களிடம் பலமுறை நேரில் எச்சரித்தும் தொடர்ந்து மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்து வருகின்றனர்.

எனவே குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்தால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளுக்குட்பட்டு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்.

எனவே, பொது மக்கள் குடிநீர் குழாய் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தாதவாறு போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...