தாராபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டம் - 2.75 கோடி ரூபாய் நிதி வழங்க கோரிக்கை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தர்ணா போராட்டம். மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாத 2.75 கோடி ரூபாய் நிதியை கோரி போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதியை வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த சில மாதங்களாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த வாரம் பொதுமக்கள் ஆர்.டி.ஓ செந்தில் அரசனிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று வருடங்களாக கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்திற்கு வரவேண்டிய 2.75 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவில்லை என்றும், இதனால் எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய இயலவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், "மக்களுக்கான பணிகளை செய்ய வளர்ச்சி கட்டணங்கள் வழங்கப்படாததால், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் எனக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு எனது பஞ்சாயத்திற்கு வளர்ச்சி பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்திற்கு வழங்க வேண்டிய வளர்ச்சி நிதியை வழங்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...