தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பஞ்சாயத்துகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முத்து கவுண்டன் பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கான இந்த முகாம் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவருமான இலா. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முகாம் அமைத்தன. இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு அலுவலகமாக செல்லாமல் ஒரே இடத்தில் தங்கள் குறைகளை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்த போது, பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் நேரடியாக பேசி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...