கோவையில் அழகு கலை பயிற்சி முறையாக கற்றுத் தராததால் பணத்தை திரும்ப கேட்டு பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்

கோவையில் அழகு கலை பயிற்சியளிப்பதாக பணம் வாங்கி முறையாக கற்றுத் தராததால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

Professional beautician என்ற அழகு கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம், ஐ திரைப்படத்தில் அழகு கலை நிபுணராக வரும் நடிகை ஒஜாஸ் ராஜானி கொண்டு அழகு கலை குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து கோவை,திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து கட்டணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த படி போதுமான இட வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் 400 நபர்களை அமர வைத்துள்ளனர். இதனால் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தனியாக அமர வைத்ததாக தெரிவித்தனர், மேலும் காலை முதல் ஒரே ஒரு வகுப்பு மட்டுமே எடுத்ததாகவும் அங்கு வந்த பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களிடம் பெற்ற பணத்தில் ஆயிரம் ரூபாயாவது திருப்பி தர வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா 500 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக கூறினார், ஆனாலும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்டனர், இதை அடுத்து போலிஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...