சீர்மரபினருக்கான SEED திட்டம்: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, சீர்மரபினருக்கான SEED திட்டம் குறித்து விளக்கமளித்துள்ளார். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், வீடு ஆகியவற்றிற்கான உதவிகள் இத்திட்டத்தில் அடங்கும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு SEED (Scheme for Economic Empowerment DNT's) திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஆட்சியர் விளக்கியுள்ளார். கல்விக்கான அதிகாரமளித்தல், சுகாதாரம், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், நிலம் மற்றும் வீடு ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

கல்வி அம்சத்தில், சீர்மரபினர்களுக்கு மத்திய/மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளிக்கப்படும். சுகாதாரத் துறையில், சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த, DNT/NT/SNT சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதி உதவி வழங்கப்படும்.

தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...