பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த மேம்பாலப் பணிகள் ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், இன்னும் பணிகள் முடிவடையவில்லை. தற்போது ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலை சோமந்துறை சித்தூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கான முக்கிய பாதையாகும். முன்னதாக இருந்த தற்காலிகப் பாலம் கடந்த ஆண்டு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அது இன்னும் சரி செய்யப்படவில்லை. மேலும், ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளுக்காக கம்பிகள் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் தென் சங்கம்பாளையம் மற்றும் சுங்கம் வழியாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கரடுமுரடான பாதைகளில் உயிர் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. சிலர் விபத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஜூலை 24 ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால் அப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...