கோவை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: பயணி கைது

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 854 கிராம் எடையுள்ள ரூ.63.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வருவாய் புலனாய்வுத் துறையினர் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.63.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் ஜூலை 24 அன்று சோதனை நடத்தினர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்த ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரது பேக்கில் 4 தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மொத்தம் 854 கிராம் எடையுள்ளவை என்றும், இவற்றின் மதிப்பு ரூ.63.24 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்திற்கு உரிய வரி செலுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது என வருவாய் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...