பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை: கோவையில் கல்லூரி மாணவர் கைது

கோவை குனியமுத்தூரில் பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த சம்பவம் வீதியில் தொல்லையாக மாறியது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவி சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. மாணவியும் அந்த பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்.

பெண் என நினைத்து மாணவி அவருடன் பழகி வந்தார். அந்த நபர் பெண்ணின் குரலில் பேசி பழகியதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர், அவர் தான் பெண் இல்லை என்றும் தனது பெயர் ஜூனைத் (வயது 22) என்றும் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் ஜூனைத் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். மாணவி பள்ளி செல்லும் வழியிலும், பல்வேறு இடங்களிலும் நின்று கொண்டு தொந்தரவு கொடுத்தார்.

சமீபத்தில், ஜூனைத் மாணவியின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, மாணவியின் தந்தை அவரை சந்தித்தார். ஜூனைத் அங்கிருந்து தப்பி ஓடும்போது அவரது செல்போன் கீழே விழுந்தது. அதில் மாணவியின் புகைப்படம் இருந்ததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேட்டபோது, ஜூனைத் தந்தைக்கு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜூனைத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...