கோட்டூர் ரெயின்போ காலனி அருகே குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய பள்ளி வாகனம்

கோட்டூரில் குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளி வாகனம் இறங்கியது. பொதுமக்கள் உதவியுடன் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சியில் 2.0 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோட்டூர் ரெயின்போ காலனி அருகே இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழியில் பள்ளி வாகனம் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கோட்டூர் பேரூராட்சியின் 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 25 ஆம் தேதி காலை, கோட்டூர் ரெயின்போ காலனி அருகே ஆர்.கே.ஆர் ஞானோதயா மேல்நிலைப்பள்ளியின் வாகனம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. திருப்பத்தில் திரும்பும்போது, குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் வாகனத்தின் பின் சக்கரம் மாட்டி, இடது புறமாக சாய்ந்தது.

இச்சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் பயத்துடன் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர் மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் பள்ளி வாகனமும் குழியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் தொடர் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...