கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு

கோவையில் CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024-25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் 2024 – 25ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் KCP Infra Limited நிறுவனத் தலைவரும், CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தின் செயலாளருமான K. சந்திரபிரகாஷ் தலைமையில் நடைபெறும். மேலும், CCCA ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் R. உதயகுமார், பொருளாளர் A. அம்மாசையப்பன், துணைத் தலைவர் V. ராஜகோபால், துணைச் செயலாளர் T. மைக்கேல், துணைப் பொருளாளர் R. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை PROPEL GROUP நிறுவனத்தின் JMD வெங்கடேஷ் அவர்கள் பங்கேற்க உள்ளார். அலுவலக பணியாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

CCCA சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் கூட்டம் இரவு உணவுடன் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...