கோவையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்

கோவை 36வது வார்டில் திமுகவின் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முகாமைத் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 36வது வார்டில் திமுகவின் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், "இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்" தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜூலை 25 அன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வடவள்ளி பகுதியில் உள்ள 36வது வார்டில் இந்த முகாம் நடைபெற்றது.



வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமசாமி பிள்ளை வீதி பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், துணை அமைப்பாளர்கள் கோவை அருண், லாரா பிரேம்தேவ், துரை பிரவீன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், கதிரேசன், தெய்வம் மகாலட்சுமி, மாமன்ற உறுப்பினர் லட்சுமி, அணிகளின் அமைப்பாளர்கள் வி.மணி, ராஜ்குமார் உள்ளிட்ட கழக அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், இளைஞர்கள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...