கோவையில் ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு தந்த தூய்மை பணியாளர்களுக்கு மாமன்றத்தில் பாராட்டு

கோவை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் குப்பையில் தவறவிடப்பட்ட ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த நேர்மையான செயலுக்காக மாமன்றக் கூட்டத்தில் அவர்கள் பாராட்டப்பட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த நேர்மையான செயலுக்காக அவர்கள் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாராட்டப்பட்டனர்.

கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்த சிவகாமி என்ற பெண், கடந்த மாதம் தனது 6 பவுன் எடையுள்ள தங்கச் செயினை தவறுதலாக குப்பைகளுடன் சேர்த்து கொடுத்துவிட்டார். இது குறித்து தனது நண்பர் சக்திவேலிடம் தெரிவித்த சிவகாமி, அவர் மூலம் 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தார்.



உடனடியாக செயல்பட்ட கவுன்சிலர் உதயகுமார், சம்பவம் நடந்த பகுதியின் துப்புரவு மேற்பார்வையாளர் மணிகண்டனை தொடர்பு கொண்டு உதவி கோரினார். அதன் பேரில், குப்பை வண்டியில் இருந்த டன் கணக்கான குப்பைகளை கீழே இறக்கி, ஆறு மணி நேர தீவிர தேடுதலுக்குப் பின் தவறவிடப்பட்ட தங்கச் செயின் மீட்கப்பட்டது.

இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட ராணி, சத்யா சாவித்திரி உள்ளிட்ட தூய்மை பணியாளர்களின் நேர்மையான செயலுக்காக கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களாலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

98வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் கூறுகையில், "நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாமன்றக் கூட்டத்தில், அவர்களது பெயர்கள் கூறப்பட்டு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களாலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன" என்றார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...