தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடக்கம்

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கியது. வேடப்பட்டி மற்றும் பேரூர் கழகங்களில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூர் கழகம் மற்றும் பேரூர் கழகத்தில் திமுகவின் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.



இந்த முகாமினை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.A.R.K.ஹக்கீம், பேரூர் கழக செயலாளர்கள் இரா.தண்டபாணி மற்றும் ப.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள், திமுக கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் இல்லம் தோறும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...