அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அம்மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2 முதல் 5 வயதுவரை உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சிறார்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளன. கோடை விடுமுறை என்பதே குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ அளிக்கப்படும் விடுமுறை காலம். எனவே, அங்கண்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...