கோவை வழியாக கொச்சுவேலி - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை வழியாக கொச்சுவேலி - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 13 வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் பல முக்கிய நகரங்களில் நின்று செல்லும்.


கோவை: கோவை வழித்தடத்தில் கொச்சுவேலி - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, இந்த சிறப்பு ரயில் சேவை ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 13 வரை இயக்கப்படும்.

கொச்சுவேலி - பரௌனி சிறப்பு ரயில் (எண்: 06091) ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

திரும்பும் வழியில், பரௌனி - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06092) ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 13 வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு பரௌனியில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் பின்வரும் முக்கிய நகரங்களில் நின்று செல்லும்: கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூர், ரூர்கேலா, ஹடியா, ராஞ்சி, மூரி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூர்.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...