காளப்பட்டியில் மூதாட்டியை தாக்கி நகை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது

கோவை காளப்பட்டியில் 80 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து தாக்கி 3 பவுன் நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர். கொள்ளையடித்த நகை மீட்கப்பட்டது.


கோவை: கோவை காளப்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்.

காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்த நஞ்சம்மாள் (80) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் பகலில் தனியாக வீட்டில் இருந்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

காயமடைந்த நஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த கொள்ளையை நடத்தியது தெரிய வந்தது.

தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையின் பின்னர், காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நதியா என்ற நர்மதா (23) மற்றும் அவரது காதலன் காளப்பட்டியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் (28) என அடையாளம் காணப்பட்டனர்.

விசாரணையில், நர்மதாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்றதால், விக்கியுடன் காதல் ஏற்பட்டு அப்பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. செலவுக்குப் பணம் இல்லாததால் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர். கைதானவர்களிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 26 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...