அரசு தொழில்நுட்ப தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

அரசு தொழில்நுட்ப தேர்வு வருகிற மே மாதம் துவங்குவதை தொடர்ந்து தகுதியுடையவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் இம்மாதம் வரவேற்கப்படுகிறது.



தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்கம் சார்பில் 2017- ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையற் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்ப தேர்விற்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று துவங்கியதைத் தொடர்ந்து வரும் 26.4.2017 தேதி வரை (ஞாயிறு தவிர) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை, 'www.dge.tn.gov.in' என்ற, இணையதளத்தின் மூலம் அரசுத் தேர்வுகள் மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

கோவையில், அசோகபுரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பதிவு செய்ய குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகலினை தேர்வரிடம் நேரடியாக கொண்டு சென்று விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், தேர்வர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்கள் யாவும் சரியானவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...