மார்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டு, மாணவர்கள் தொடர் போராட்டம்.


கோவை கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவர்களை மோசமாக நடத்துவதாகவும் கூறி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், செய்தி ஊடகங்களை சந்திக்கக்கூடாது எனவும், கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனை மீறி கல்லூரி நுழைவுவாயில் கதவை திறந்து, வாயில் முன்பாக போராட்டம் நடத்த வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதையடுத்து கல்லூரியை விட்டு வெளியேற மறுத்து மாணவர்கள் வாயில் முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் போது மாணவர்களை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...