கோவையில் தூய்மை பணியாளரை கடத்தி தாக்கிய 5 பேர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளரை ஆட்டோவில் கடத்தி தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை ராமநாதபுரம் காமராஜர் நகரை சேர்ந்த தரணீதரன் (23) என்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் நேற்று (ஜூலை 27) ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் நின்றிருந்தபோது, குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறு செய்து, ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி, அந்த 5 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தரணீதரனை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கி விட்டு சென்றனர். காயமடைந்த தரணீதரனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து தாக்குதல் நடத்திய தெற்கு உக்கடத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (29), மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அன்வர் (20), மூக்கன் (21), செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுமன் (21), புல்லுக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (23) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...